திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு மாணவிகள் நடனம்

கேரள மக்களின் வசந்தகாலமான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு, பாடலுக்கு ஏற்றவாறு மாணவியர் நடனமாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: மாணவிகள் கேரள சேலை அணிந்து ஓணம் திருநாளை வரவேற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஒருவொருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

கேரள மக்களி்ன் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிப்பதால் இங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகள் கேரள சேலை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.



மேலும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண்டிகைக்காக திருப்பூரில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...