கோவையில் அனல் பறக்க நடந்த கார், பைக் ரேஸ் - மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள்

கோவையில் எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் கார்,பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் அனல் பறக்க சென்ற வீர்ர், வீராங்கனைகளை சாலையில் இருபுறங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை: கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டியில் தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 26-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் ஆரம்பமானது.



ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்க்கான இருசக்கர வாகன பந்தயம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார்பந்தய வீரர்களான தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.



அனல் பறக்க நடந்த இந்த ரேசில், சீறிப்பாய்ந்த கார், பைக் வாகனங்களை பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தது ரசித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...