கோவையில் அனல் பறக்க நடந்த கார், பைக் ரேஸ் - மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள்

கோவையில் எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் கார்,பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் அனல் பறக்க சென்ற வீர்ர், வீராங்கனைகளை சாலையில் இருபுறங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை: கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டியில் தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 26-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் ஆரம்பமானது.



ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்க்கான இருசக்கர வாகன பந்தயம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார்பந்தய வீரர்களான தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.



அனல் பறக்க நடந்த இந்த ரேசில், சீறிப்பாய்ந்த கார், பைக் வாகனங்களை பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தது ரசித்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...