தாராபுரம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்து - தாய், மகன் பலியான சோகம்!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில், மேலும், 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் 2 கார் மற்றும் ஒரு வேன் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் சங்கனன் மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் தனது மனைவி அபிராமி, மகன் அஜய், மகள் ஹாசினி மற்றும் மாமியார் லதா ஆகியோர் ஓலப்பாளையத்தில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே பழனியில் இருந்து ஈரோடு திருநகர் காலனி பகுதிக்கு சென்று கொண்டிருந்த டொயோட்டா காரை ஓட்டி வந்த திருமூர்த்தி(47) அவரது மனைவி தேவி(46) அவரது மகன் சரவணன் (17) மகள் சௌமியா (19) ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.



அப்போது திருமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்தார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் (17) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த விபத்தின் போது பழனி நோக்கி சென்று கொண்டிருந்த பயணியர் டூரிஸ்ட் வாகனத்தின் மீது இரண்டு கார்களும் மோதியதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டூரிஸ்ட் வாகனம் அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.



இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிகிச்சைக்காக வந்திருந்த திருமூர்த்தியின் மனைவி தேவி, சிகிச்சை பலனின்றி தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தேவி மற்றும் மகன் சரவணன் ஆகியோர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக தாராபுரம்-பழனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...