சார்ஜாவிலிருந்து கோவைக்கு தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது


சார்ஜாவில் இருந்து கோவை வரும்  ஏர் அரேபியா விமானம் மூலம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை  கோவை வந்தடைந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒலிப்பெருக்கி ஒன்றின் அடிப்பக்கத்தில் வைத்து 1 கிலோ 406  கிராம் எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த திவாகரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த 11ம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 1கிலோ 166 கிராம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...