உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், யானையை தொந்தரவு செய்யும் வகையில் ஹாரன் அடிப்பதோ, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுப்பதோ கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு செக்போஸ்ட் வரை சாலையில் இருபுறமும் அமராவதி - உடுமலை வனச்சரகங்களில், ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளன.

உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடைகாலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும் மழைக்காலங்களில் வனப்பகுதியிலேயே குளம் குட்டைகளிலேயே தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலைகளை கடந்து செல்வது குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் தற்பொழுது மழை குறைவு காரணமாக வனப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஓன்று ஏழுமலையான் கோவில் பிரிவு பகுதியில் சாலையில் நின்று உள்ளது.

ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சிறிது நேரம் வாகனத்திலே காத்திருந்து யானை சென்ற பின் வாகனங்கள் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...