உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், யானையை தொந்தரவு செய்யும் வகையில் ஹாரன் அடிப்பதோ, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுப்பதோ கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு செக்போஸ்ட் வரை சாலையில் இருபுறமும் அமராவதி - உடுமலை வனச்சரகங்களில், ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளன.

உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடைகாலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும் மழைக்காலங்களில் வனப்பகுதியிலேயே குளம் குட்டைகளிலேயே தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலைகளை கடந்து செல்வது குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் தற்பொழுது மழை குறைவு காரணமாக வனப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஓன்று ஏழுமலையான் கோவில் பிரிவு பகுதியில் சாலையில் நின்று உள்ளது.

ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சிறிது நேரம் வாகனத்திலே காத்திருந்து யானை சென்ற பின் வாகனங்கள் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...