மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் 12 தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து 20 கோடி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம் நடைபெற்றது. இயந்திர மூலதனக்கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், Corporate கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியங்களும் வட்டியில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது, இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் 12 தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து 20 கோடி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.

இம்முகாமில் தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மண்டல மேலாளர் பேபி, கோவை கிளை மேலாளர் கீதா, கொடிசியா தலைவர் திருஞானம், முன்னாள் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்/நிதி ஆலோசகர் வணங்காமுடி உட்பட பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

இக்கழகமானது தமிழ்நாடு அரசின் மானியத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மானியத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது. இக்கழகமானது தனது சிறப்பு தொழில் கடன் விழாவினை ஆகஸ்ட் 21- ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ம் தேதி வரை நடத்தி வரும் நிலையில், இதன் மூலமாக அனைத்து விதமான தொழில் கடன்களும் வழங்கப்படும்.

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை மானியம்) நிதி உதவி வழங்கப்படுகிறது. முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

அதுமட்டுமின்றி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (NEED) மூலம் 5 முதல் 10 சதவிகிதம் முதலீடு செய்யும் தொழில்களுக்கு 25 சதவிகிதம் மானியமாகவும், 70 சதவிகிதம் கடனுதவியும் வழங்கப்படுவதுடன் 3 சதவிகிதம் வட்டியில் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

அதுபோலவே, அண்ணல் அம்பேத்கர் சேம்பியன்ஸ் திட்டம் (AABCS) மூலதனமின்றி வழங்கப்படும் 65சதவிகித கடனுதவியில் 35சதவிகிதம் மானியமும், தவிகிதம் வட்டியிலும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

இதுபோல் இயந்திர மூலதனக்கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், Corporate கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியங்களும் வட்டியில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது, இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...