அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு - கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் துடியலூர் பகுதி சார்பாக கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதில் பகுதி செயலாளர் வணிதா மணி, அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சாந்தி பூசன், பந்தல் வீடு பிரகாஷ், சுரேஷ் பாபு, வெள்ளகிணர் காளிச்சாமி, அண்ணா தொழில்சங்கம் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன், கட்சி நிர்வாகிகள் மோகன்ராஜ், சி.டி.சி.செல்வம், சுசீலா, அண்ணா ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் பாபு என்கிற ரங்கசாமி, வேல்முருகன், திரு, கெளதம், சுதாகர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு துடியலூர் பேருந்து நிறுத்தும் அருகே பட்டாசு வெடித்தனர்.



அப்போது அவர்கள் புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...