தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா - உடுமலையில் தேமுதிகவினர் உற்சாக கொண்டாட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் தேமுதிகவினர் 10 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, உடுமலைபேட்டையில், தேமுதிகவினர் அவர் உடல் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் 10 கிலோ கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.



பின்னர் பெரிய கோட்டை ஊராட்சியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் பழனி ஆண்டவர் நகர் கோமதி நகர் கொல்லம் பட்டறை உட்பட 7க்கு மேற்பட்ட இடங்களிலும் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசக்தி காலனி சங்கர் நகர் செல்லப்பம்பாளையம் மானுப்பட்டி உரல் பட்டி ஊராட்சிகளில் தேமுதிக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டது.

மேலும் எரிசனம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்காக இரண்டு எடை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



சிவசக்தி காலணியில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர் ஆறுசாமி தலைமை தாங்கினார், மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை , துணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, ஆலாம் பாளையம் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் ஜி.கே என்கிற கணேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கிரி, பெரியசாமி, குணசேகரன் உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரை கண்ணன் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...