ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு!

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களில்‌ கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தையசாலை, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சிகுளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌ பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ (Built Environment Category) கோவை மாநகராட்சி முதல்‌ பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசுக்கு ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி, ISAC (India Smart city Award Contest) விருதுகள்‌ 2022 ஒன்றிய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி மிஷன்‌, இயக்குநரால்‌ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தைய சாலை போன்ற பகுதிகளில்‌ சிறந்த மாதிரி சாலைகள்‌ அமைத்தல்‌, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சி குளம்‌, முத்தண்ணன்‌ குளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌, பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர்‌ இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்‌ 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள்‌ இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும்‌, திட்ட செயல்பாட்டில்‌ சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில்‌ கோயம்புத்தூர்‌, இந்தியாவின்‌ தெற்கு மண்டலத்தில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

நகரங்களில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களின்‌ செயலாக்கத்தை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ சிறந்த நகரங்கள்‌, சிறந்த திட்டப்‌ பணிகள்‌ மற்றும்‌ செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள்‌ வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவரால்‌, மத்திய பிரதேச மாநிலம்‌, இந்தார்‌ (Indore) நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 அன்று நடைபெறும்‌ விழாவில்‌ இந்த விருதுகள்‌ வழங்கப்படும்‌.

சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்தும்‌ பல்வேறு மாநிலங்களுக்கு இடையில்‌ நடைபெற்ற தேர்வில்‌ தமிழ்நாடு தேசிய அளவில்‌ இரண்டாவது இடம்‌ பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...