ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு!

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களில்‌ கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தையசாலை, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சிகுளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌ பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ (Built Environment Category) கோவை மாநகராட்சி முதல்‌ பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசுக்கு ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி, ISAC (India Smart city Award Contest) விருதுகள்‌ 2022 ஒன்றிய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி மிஷன்‌, இயக்குநரால்‌ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தைய சாலை போன்ற பகுதிகளில்‌ சிறந்த மாதிரி சாலைகள்‌ அமைத்தல்‌, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சி குளம்‌, முத்தண்ணன்‌ குளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌, பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர்‌ இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்‌ 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள்‌ இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும்‌, திட்ட செயல்பாட்டில்‌ சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில்‌ கோயம்புத்தூர்‌, இந்தியாவின்‌ தெற்கு மண்டலத்தில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

நகரங்களில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களின்‌ செயலாக்கத்தை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ சிறந்த நகரங்கள்‌, சிறந்த திட்டப்‌ பணிகள்‌ மற்றும்‌ செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள்‌ வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவரால்‌, மத்திய பிரதேச மாநிலம்‌, இந்தார்‌ (Indore) நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 அன்று நடைபெறும்‌ விழாவில்‌ இந்த விருதுகள்‌ வழங்கப்படும்‌.

சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்தும்‌ பல்வேறு மாநிலங்களுக்கு இடையில்‌ நடைபெற்ற தேர்வில்‌ தமிழ்நாடு தேசிய அளவில்‌ இரண்டாவது இடம்‌ பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...