கோவை வேளாண் பல்கலையில் 2 தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கல்!

கோவை வேளாண் பல்கலையின் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் சார்பில் மத்திய தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை‌ நிதியுதவியுடன், தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை வேளாண் பல்கலையில் தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌, தொழில்நுட்ப வணிக காப்பகமானது மத்திய அரசின்‌ வர்த்தக மற்றும்‌ தொழில் துறை அமைச்சம்‌, தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆகியவற்றின்‌ நிதியுதவியுடன்‌ 2022 முதல்‌ இந்திய தொழிலமுனையவோர்களுக்கான ஆரம்ப மூலதன திட்டத்தின்‌ (Startup India Seed fund Scheme - SISFS) மையமாக திகழ்கிறது.

இத்திட்டமானது தொழில்‌ முனைவோர்களின் கருத்தாக்கம், முன்மாதிரி மேம்பாடு, தயாரிப்பு பொருட்களை சோதனை செய்தல், சந்தைப்படுத்துதல்‌ மற்றும்‌ வணிகமயமாக்கல்‌ போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வணிக கருத்தின்‌ ஆதாரம்‌ காண்பித்தல், முன்மாதிரி உருவாக்குதல்‌, தயாரிப்புகளுக்கான சாதனைகள்‌ ஆகியவற்றிற்கு ரூ.20 லட்சம்‌ வரை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும்‌ சந்தைப்படுத்துதல்‌, வணிகமயமாக்கல்‌ மாற்றத்தக்க கடன்‌ வழியில்‌ வணிகத்தை மேம்படுத்துதல்‌ ஆகியவற்றிற்கு ரூ.50 லட்சம்‌ வரை முதலீடு தொகையாக வழங்கப்படுகிறது.



485 விண்ணப்பதாரர்கள்‌ ISMC குழுவினரால்‌ திரையிடப்பட்டு இரண்டு தொழில்‌ முனைவோர்கள்‌ சந்தோஷ்‌ (நிறுவனர்‌, COCO SCIENCE) மற்றும்‌ சிரஞ்சீவி ராஜன்‌ (SSNS BIO GARDEN PVT LTD) ஆகியோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம்‌ வரையிலான நிதியுதவியை மானியமாக பெற தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்‌.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி,‌ அவர்களிடம் தங்கள்‌ புதுமை தயாரிப்பு குறித்தும்‌ அதன்‌ மேம்பாடு குறித்தும்‌ கலந்துரையாடினர்‌. மேலும்‌ முதற்‌கட்ட நிதியுதவி ரூ.6 லட்சத்திற்கான அனுமதி உத்தரவு பெற்றனர்‌. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல அதிகாரி ஞானசம்பந்தம்‌ ஆகியோர் கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...