ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவு பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.




கோவை: மறைவான இடத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, பின்னர், கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையில் சிக்கிய இரண்டு பேர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கிணத்துக்கடவு - பாலார்பதி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர்.

அதில், தலா 40 கிலோ எடை கொண்ட, நான்கு மூட்டைகளில் மொத்தம் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பாலார்பதியை சேர்ந்த சரவணக்குமார் 23, சென்றாம்பாளையம் சபாபதி43 ஆகியோர் என்பதும், சென்றாம்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்தில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதை, கேரளா மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.



இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...