ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவு பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.




கோவை: மறைவான இடத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, பின்னர், கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையில் சிக்கிய இரண்டு பேர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கிணத்துக்கடவு - பாலார்பதி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர்.

அதில், தலா 40 கிலோ எடை கொண்ட, நான்கு மூட்டைகளில் மொத்தம் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பாலார்பதியை சேர்ந்த சரவணக்குமார் 23, சென்றாம்பாளையம் சபாபதி43 ஆகியோர் என்பதும், சென்றாம்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்தில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதை, கேரளா மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.



இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...