இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எங்க ஊரான விழுப்புரத்தை சேர்ந்தவர் - அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




கோவை: உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி. இது திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள் பொன்முடியும், முத்துசாமியும் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்றார்.

உலக அளவில் சந்திர மண்டலத்திற்கு செல்வதில் இயக்குனராக உருவாகி இருப்பது பெருமை. அவருடைய தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய திருச்சி மண்டல பொறுப்பாளராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...