இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எங்க ஊரான விழுப்புரத்தை சேர்ந்தவர் - அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




கோவை: உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி. இது திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள் பொன்முடியும், முத்துசாமியும் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்றார்.

உலக அளவில் சந்திர மண்டலத்திற்கு செல்வதில் இயக்குனராக உருவாகி இருப்பது பெருமை. அவருடைய தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய திருச்சி மண்டல பொறுப்பாளராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...