இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எங்க ஊரான விழுப்புரத்தை சேர்ந்தவர் - அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




கோவை: உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி. இது திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள் பொன்முடியும், முத்துசாமியும் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்றார்.

உலக அளவில் சந்திர மண்டலத்திற்கு செல்வதில் இயக்குனராக உருவாகி இருப்பது பெருமை. அவருடைய தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய திருச்சி மண்டல பொறுப்பாளராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...