ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி காட்டிய அனைத்து முற்போக்கு அமைப்பினர் கைது

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து முற்போக்கு அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: தமிழக சட்டமன்றத்தையும், தமிழ மக்களின் உணர்வுளையும் மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து லாலி ரோடு வழியாக பாரதியார் பல்கலைக்கழகம் செல்கிறார்.

இந்நிலையில் லாலி ரோடு பகுதியில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாக புகார் கூறி இந்த கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...