ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி காட்டிய அனைத்து முற்போக்கு அமைப்பினர் கைது

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து முற்போக்கு அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: தமிழக சட்டமன்றத்தையும், தமிழ மக்களின் உணர்வுளையும் மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து லாலி ரோடு வழியாக பாரதியார் பல்கலைக்கழகம் செல்கிறார்.

இந்நிலையில் லாலி ரோடு பகுதியில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாக புகார் கூறி இந்த கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...