மரப்பட்டா வழங்க வேண்டும் - விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வாங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வழங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும், நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள், தங்களின் சொந்த விளைநிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு விலை நிலங்களிலும் பயிரிடப்பட்டு இருப்பதனால், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல என விவசாயிகள் தெரிவித்தனர்.



அதேபோன்று விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வலியுறுத்தினர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வரும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...