மரப்பட்டா வழங்க வேண்டும் - விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வாங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வழங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும், நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள், தங்களின் சொந்த விளைநிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு விலை நிலங்களிலும் பயிரிடப்பட்டு இருப்பதனால், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல என விவசாயிகள் தெரிவித்தனர்.



அதேபோன்று விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வலியுறுத்தினர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வரும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...