கோவையில் மாநகர காவல் ஆணையர் தலைமையில்  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்!

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுபடுத்துவதற்கான கூட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


கோவை: மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 145 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து காவல்துறை மூலமாகவும். பல்வேறு துறைகளின் மூலமாகவும் துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, பல்வேறு துறைகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு. போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்கவும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க காவல்துறையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராக உள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தயக்கமின்றி உண்மையான தகவல்களை காவல்துறைக்கு ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...