பிரதமரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை மாவட்ட பாஜகவினர்

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.


கோவை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நடைபெறும் இலவச திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 73வது பிறந்தநாள் காண்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிப்பாளையம்- போத்தனூர் சாலையில் சக்தி பள்ளிக்கு எதிரில் 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பூமி பூஜை செய்து திருமணத்திற்கான பணிகள் துவங்கியது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...