மூத்த குடிமக்கள் தினம் - கோவையில் முதியோரை தேடி சென்று உதவுகின்ற புதுமை திட்டம் தொடக்கம்

கோவையில் உலக மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் இயங்கும் "இன் ஹவுஸ் மெடிக்கேர்" சார்பில் முதியோருக்கு முதல் வணக்கம் எனும் முதியோர் உதவி எண்ணை அறிமுகம் செய்யப்பட்டது.



கோவை: மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி முதியோர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்காக பிரத்யேக முதியோர் உதவி எண்ணை ”இன் ஹவுஸ் மெடிகேர்” பராமரிப்பு மய்யம் அறிமுகம் செய்தது.

கோவை ராம் நகர் பகுதியில் ”இன் ஹவுஸ் மெடிகேர்” எனும் முதியோர்களுக்கான பராமரிப்பு மையம் இயங்கி வருகின்றது. முதியோர்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக பராமரிப்பதற்கான மருத்துவ வசதி, மறுவாழ்வுக்கான வசதிகள் என அனைத்து வசதிகளும் இம்மையத்தில் இருக்கின்றன.

முதியோர் நலன் சார்ந்து இயக்கும் இந்த மையத்தில், மூத்த குடிமக்களுக்கான தினத்தை முன்னிட்டு முதியோருக்கு முதல் வணக்கம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக முதியோர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்காக பிரத்யேக முதியோர் உதவி எண்ணை ”இன் ஹவுஸ் மெடிகேர்” பராமரிப்பு மய்யம் அறிமுகம் செய்தது.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு, முதியோர் உதவி எண்ணான 9626332220 என்ற அலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் மக்களை தேடி மருத்துவம் போன்று, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக முதியோரை தேடி சென்று உதவுகின்ற புதுமை திட்டமாக, முதியோருக்கு முதல் வணக்கம் திட்டம் அமைந்திருக்கின்றது.

இது குறித்து ”இன் ஹவுஸ் மெடிகேர்” மையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹசீப் கான் கூறுகையில், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த முதியோர் பராமரிப்பு மையத்தை நடத்தி வருவதாக கூறினார். முதியவர்களுக்கு சிறந்த மருத்துவத்தை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், முதியவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கே சென்று நூற்றுக்கும் மேற்பட்ட இலவச முகாம்களை நடத்தியிருப்பதாக தெரிவித்தார். வயதான காலத்தில் மருத்துவ வசதி மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆதரவும் தேவைப்படுவதாக தெரிவித்த அவர், முதியோர்களுக்கான அனைத்து சேவைகளையும் வழங்குவதாக கூறினார்.

”இன் ஹவுஸ் மெடிகேர்”ல் வாத நோய், எலும்பு முறிவு போன்ற நோய்களுக்கு சிறந்த சிகிச்சை தருவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தாலும், அவர்களது வாழ்வில் மீண்டும் தானாக இயங்க உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி வழங்குவதாக தெரிவித்தார்.

தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள முதியோர் உதவி எண்ணை தொடர்புகொண்டால், அலைபேசி ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்தார். கோவையில் வசித்து வரும் மூத்த குடிமக்கள் எந்த விதமான உதவியையும் இந்த எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வீட்டிற்கே சென்று கூட உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ஹசிப் கான் தெரிவித்தார். முதியோர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டுவரும் ”இன் ஹவுஸ் மெடிகேரின்” இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...