முன்பகை காரணமாக டிரைவர் வெட்டிக்கொலை - குற்றவாளியை பிடித்து கோவை மத்திய சிறையில் அடைத்த காவல்துறை

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் முன்பகை காரணமாக டிரைவர் ரவியை கொலை செய்த செல்வராஜ் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை: திருட்டு பொருட்களை விற்பனை செய்ததை தட்டிக்கேட்டதால், டிரைவர் ரவியை, செல்வராஜ் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கடையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் செல்வராஜ் என்பவர் வேலை பார்க்கின்றனர். செல்வராஜ் திருட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார் இதனை ரவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ரவி நேற்று முந்தினம் வேலைக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நந்தகுமார் கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு ரவி சென்றது தெரிய வந்தது.

எனவே நந்தகுமார் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரவி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே கடையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் முன் விரோதம் காரணமாக ரவியை அறிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...