முன்பகை காரணமாக டிரைவர் வெட்டிக்கொலை - குற்றவாளியை பிடித்து கோவை மத்திய சிறையில் அடைத்த காவல்துறை

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் முன்பகை காரணமாக டிரைவர் ரவியை கொலை செய்த செல்வராஜ் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை: திருட்டு பொருட்களை விற்பனை செய்ததை தட்டிக்கேட்டதால், டிரைவர் ரவியை, செல்வராஜ் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கடையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் செல்வராஜ் என்பவர் வேலை பார்க்கின்றனர். செல்வராஜ் திருட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார் இதனை ரவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ரவி நேற்று முந்தினம் வேலைக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நந்தகுமார் கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு ரவி சென்றது தெரிய வந்தது.

எனவே நந்தகுமார் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரவி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே கடையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் முன் விரோதம் காரணமாக ரவியை அறிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...