ஒரே நாளில் அதிகப்படியான அபராதம் வசூலித்து சேலம் தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் சாதனை

சமீபகாலமாக ரயில் பயணத்தின் போது பெரும்பாலான பயணிகள் பயணச்சீட்டு பெறாமலும், முறையற்ற பயணத்தில் ஈடுபட்டு வருவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனை தடுக்கும் வகையில் சேலம் தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் ரயில் பயணிகளிடைய தொடர் சோதனைகளும், ரகசிய சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தலைமையில் கடந்த வாரம் ஞாயிறன்று பயணிகளிடையே சோதனை நடைபெற்றது. அதில், முறையாக பயணச்சீட்டு இல்லாமை, பார்சல் பொருட்களுக்கான டிக்கெட் இல்லாமை உள்ளிட்டு 2,47,025 ரூபாயும், 546 நபர்கள் பயணச்சீட்டு முன்பதிவு பெறாமை என 2,43,325 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், இச்சோதனையில் அதிகப்படியான பொருட்களுக்கான அனுமதி சீட்டு பெறாததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் சோதனையில் அபராதமாக பெறப்பட்ட தொகையே சேலம் ரயில்வே கோட்டத்தினால் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகை ஆகும். முன்னதாக 2016-யில் இதேப்போன்ற சோதனையில் சேலம் ரயில்வே கோட்டத்துறையால் 2,10,400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சிறப்புப் படை வீரர்கள் 18 பேர் உட்பட 216 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது முறையாக பயணச்சீட்டு பெறாமை, அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதற்கான தொகை செலுத்தாமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...