கோவை மத்திய மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு!

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ ரூ.3.95 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ பொதுகழிப்பிடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணி, தார்சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.68க்கு உட்பட்ட காந்திபுரம்‌, டாடாபாத்‌, கருணா எல்லை காலனியில்‌ பாராளுமன்ற உறுப்பினா்‌ நிதியிலிருந்து ரூ.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சித்திட்ட மைய கட்டப்பட்டு வருகிறது. ‌

இந்த கட்டுமான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனை‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.66க்கு உட்பட்ட அம்மன்குளம்‌, கருப்பராயன்‌ கோவில்‌ வீதியில்‌ ஸ்வச்‌ பாரத்‌ மிஷன்‌ (SBM) திட்டத்தின் கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொது கழிப்பிடம்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.



மேலும், வார்டு எண் 72க்கு உட்பட்ட ஆறுமுகம்‌ நகரில் நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.85 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 499 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணியை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.65க்கு உட்பட்ட சிவராம்‌ நகரில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும்‌ பணியினை நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கமலாவதி போஸ்‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளாகள்‌ கணேசன்‌, பாலச்சந்தர்‌, மஞ்சுளாதேவி மற்றும்‌ மாநகராட்சி அலுவலாகள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...