கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் இந்திய கார் வகை பிரிவு நாளை திறப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கார்களுக்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமடைந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆக.18) திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கார்கள் பிரிவு நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கோவையில் ஜிடி கார் மியூசியம் 2015 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நல்லாதரவையடுத்து, இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்களின் சேகரிப்பை சேர்த்து வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னுாட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய கார் பிரிவு, 10,500 சதுர அடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இவை, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலம் அடைந்தவை.



இவை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாகும். இவற்றின் தயாரிப்பின் அடையாளங்களாக இவை திகழ்கின்றன.



இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டவை, இன்னும் பல கார்கள் அன்பளிப்பாக கிடைத்தவை. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மக்களுக்காக கார்களை தயாரிக்க மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.



அருங்காட்சியகத்தின் இந்த சிறப்பு பிரிவு, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9.00 மணி அளவில் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...