தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு - சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் விசாரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, கட்டிட வேலைகள் விரைவாக முடித்து தருமாறு பொறியாளரிடம் கேட்டுகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றதா? என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அரசு மருத்துவ மனையில் உள்ள அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கட்டிட பணியில் உள்ள பொறியாளரிடம் கட்டிட வேலைகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். கட்டிடம் விரைவாகவும் உறுதியாகவும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...