விவசாய நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு - மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக விவசாயிகள் மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால், சென்னையில் உள்ள தலைமை செயலத்தை முற்றுகையிடப்போவதாக தமிழ அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசால் 1963ஆம் ஆண்டு சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டு உழவர்கள், வீடு மனை உரிமையாளர்களின் உரிமை ஆக்கப்பட்ட இடம் ஆகிய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையும் , வக்பு வாரியமும் தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சில பகுதிகளில் விவசாயம் செய்து வரும் நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இணாம் விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் உடமைகளுடன் தொடர்பு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு இதனை கண்டு கொள்ளாவிடில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் குமரன் நினைவகத்தின் நிழலில் நின்ற விவசாயிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்தபோது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...