கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர் - சொந்த ஊரில் பணியிட மாறுதல் வழங்க ஆணை

கோவையில் மனைவி உயிரிழந்து விட்டதால் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சொந்த ஊரிலே பணி வழங்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் மனு வழங்கினார். இதனையேற்று மறுநாளே அவருக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோவை: கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து பணியிட மாறுதல் கோரி மனு வழங்கிய ஓட்டுநருக்கு கோரிக்கை வைத்த மறுநாளே பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

கோவை சுங்கம் பகுதியில், உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது மேடைக்கு வந்த ஓட்டுநர் கண்ணன், தனது மனைவி இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமான கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து, தனது சொந்த ஊரான தேனியிலேயே பணியிட மாறுதல் வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.

கைக்குழந்தையுடன் ஓட்டுனர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு அவரது சொந்த ஊரிலே பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்ணன் நாளை பெற்று கொள்கிறார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...