கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர் - சொந்த ஊரில் பணியிட மாறுதல் வழங்க ஆணை

கோவையில் மனைவி உயிரிழந்து விட்டதால் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சொந்த ஊரிலே பணி வழங்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் மனு வழங்கினார். இதனையேற்று மறுநாளே அவருக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோவை: கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து பணியிட மாறுதல் கோரி மனு வழங்கிய ஓட்டுநருக்கு கோரிக்கை வைத்த மறுநாளே பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

கோவை சுங்கம் பகுதியில், உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது மேடைக்கு வந்த ஓட்டுநர் கண்ணன், தனது மனைவி இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமான கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து, தனது சொந்த ஊரான தேனியிலேயே பணியிட மாறுதல் வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.

கைக்குழந்தையுடன் ஓட்டுனர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு அவரது சொந்த ஊரிலே பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்ணன் நாளை பெற்று கொள்கிறார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...