கணியூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய திமுக எம்.பி ஆ.ராசா!

கணியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய இளைஞரை அவ்வழியாக சென்ற திமுக எம்.பி ஆ.ராசா, மீட்டு அவரது காரிலேயே வைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கோவை: கணியூர் அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வாலிபரை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, தொகுதியில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, அவிநாசியில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அவருடன், திமுக மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்டோர் பயணித்தனர்.

அப்போது, கணியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார்.



இதனை கண்ட திமுக எம்.பி ஆ.ராசா, உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி விட்டு படுகாயமடைந்த இளைஞரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



மயக்கமுற்ற அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுலை அனுப்பி வைத்தார். இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றார். லாரி ஒன்றில் மீது எதிர்பாராத விதமாக வாலிபர் மோதியதனால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கழுத்தில், கைகளில் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...