தாராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி தலைவர் - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.



ஆனால் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி திடீரென வரவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டம் நடந்த வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கடந்த இரண்டு கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேண்டும் என்று புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...