நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் விழா - நிர்வாகிகள் புகார்!

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கில், அமைப்பின் செயல்பாடுகளுக்கும், அமைப்பின் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கொசினா சார்பில் நாளைய தினம் விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள விழாவை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2021ஆம் ஆண்டு கொசினா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் செல்லாது என கோவை மாவட்ட பத்திர பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சங்கத்தின் பெயரை பயன்படுத்தி எந்த செயல்பாடும் செய்யக்கூடாது, விழாக்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சங்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் பெயரை பயன்படுத்தி சிலர் கோவையில் முப்பெரும் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் வரும் 16ம் தேதி விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலர் விழா நடத்த ஏற்பாடு செய்திருப்பது சங்க உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், விழா நடத்த அனுமதிக்க கூடாது என சங்க நிர்வாகத்தின் சார்பில் பத்திரப்பதிவு, கோவை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...