உடுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சம் முறைகேடு - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அடுத்த விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் முறையாக ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் பெற்ற பயிர் கடனில் 50 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயின் கடன் ரசீது வழங்காமலும் மறுகடன் வழங்காதையை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

கடந்த எட்டு மாத காலமாக விவசாயிகள் பயிர் கடன் பெற்று செலுத்திய பிறகும் அவரது வங்கி கணக்கில் வர வைக்காமல் சுமார் 50 லட்சத்திற்கு மேல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்கடன் ரசிது வழங்க வேண்டும். மேலும் மறு கடன் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்



உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...