தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மனு!

தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் போக்குவரத்து பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் சுமார் 45 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்ல முடியும்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் செந்தில் அரசன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...