தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மனு!

தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் போக்குவரத்து பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் சுமார் 45 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்ல முடியும்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் செந்தில் அரசன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...