நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் - கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு!

நாங்குநேரியில் ஜாதி ரீதியிலான வன்மத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவ போல், மீண்டும் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாங்குநேரி சம்பவம் போல் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை அகற்றும் வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை படிவத்தில் சாதி மத பிரிவு விவரங்கள் பெறுவதை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அகற்ற வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் கல்வி சலுகைகள் ஆகியவை குடும்ப வருவாய் சான்று அடிப்படையில் வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கைகள் இந்தியன் என்ற ஒரு அடையாளத்தில் வழங்கப்படும் என்ற திட்டத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் பள்ளி கல்லூரிகளிலும் அரசு சார்பில் விரைவான சர்வே நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...