பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனை - உடனடி நடவடிக்கை தேவை என்று ஆட்சியரிடம் மக்கள் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.



கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

அவர் மட்டுமின்றி அங்கு ஜோதிமணி, சதீஷ், ஆகியோரும் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்தே மது விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளதாக கூறினர்.



மேலும் பண பலத்தை கொண்டே அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் அங்கு மது விற்பனை நடைபெறுவதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...