பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனை - உடனடி நடவடிக்கை தேவை என்று ஆட்சியரிடம் மக்கள் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.



கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

அவர் மட்டுமின்றி அங்கு ஜோதிமணி, சதீஷ், ஆகியோரும் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்தே மது விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளதாக கூறினர்.



மேலும் பண பலத்தை கொண்டே அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் அங்கு மது விற்பனை நடைபெறுவதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...