மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு – பேரனுடன் சென்றபோது விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பேரனுடன் சென்ற மூதாட்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...