தடாகம் அருகே பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது!

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



மேலும் கணுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடங்கள் நடைபெற்றது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...