தடாகம் அருகே பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது!

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



மேலும் கணுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடங்கள் நடைபெற்றது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...