திருப்பூரில் தையல் இயந்திர கண்காட்சி - தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம்!

திருப்பூரில் நடைபெற்ற தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யபட்ட நிலையில், உதவியாளர்களே இயக்க முடியும் என்பதால், ஆட் பற்றாக்குறைக்கு இது தீர்வாக அமையும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் நடந்து வரும் தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்க கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பனியன் ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் நகரில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பனியன் உள்ளாடைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகள் உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த பனியன் ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான தொழிற்சாலைகளில், சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிகிறார்கள்.

ஆனாலும் திருப்பூர் தொழில் துறையினரின் ஆட்கள் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடாக இல்லை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது திருப்பூர் தொழில்துறையினருக்கு தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் எடுக்கக்கூடிய தொடர் விடுமுறைகள், சொந்த ஊருக்கு செல்வது போன்ற காரணங்களால் திருப்பூர் பனியன் தொழிலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 40 சதவீத அளவில் எல்லா காலங்களிலுமே ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.



இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூரில் நடந்த தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தைக்கக்கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.



பனியன் மற்றும் டீ சர்ட் தயாரிப்பில் கை டவர், பாடி டவர், பாக்கெட் வைப்பது போன்ற பணிகளை தானாகவே மேற்கொள்ளும் பேட்லாக் தையல் இயந்திரம் காட்சிப்படுத்தி விளக்கப்பட்டது. துணிகளை கன்வேயரில் வைத்தால் தானாகவே மடித்து தைத்து பின்னர் அடுக்கி தருகிறது இந்த இயந்திரம்.



அதேபோல தானாகவே பாக்கெட் பொருத்தக்கூடிய தையல் இயந்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்களை திருப்பூர் சார்ந்த தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றார்கள்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது, அதி நவீன இயந்திரங்களின் வருகையால் ஆற்றல் பற்றாக்குறைக்கு பெரும் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதேபோல், கான்சாய் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது, இயந்திரங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தற்போது பேட்லாக் இயந்திரங்களில் கை டவர் மற்றும் பாடி டவர் போன்றவற்றை தானாகவே வைக்கும் இயந்திரங்களை உருவாக்கி அதை திருப்பூர் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து இருக்கிறோம். சாதாரணமாக 1500 பீஸ்கள் தயாரிக்க கூடிய இடத்தில் இந்த நவீன தானியங்கி தையல் இயந்திரங்கள் மூலமாக 2500 முதல் 3000 பீஸ்கள் தயாரிக்க முடியும்.

டெய்லர் இல்லாமல் உதவியாளரே இந்த மிஷின்களை இயக்க முடியும். இது தவிர ஓவர் லாக் மற்றும் பிளாட் லாக் இயந்திரங்களில் சென்சார்களுடன் கூடிய அதிநவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண உதவியாளர்களே இந்த மெஷின்களை இயக்க முடியும். எனவே திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறைக்கு இந்த இயந்திரங்கள் தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...