தாராபுரத்தில், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் அடுத்த ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளி செல்ல சிரமப்பட்டு வருவதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.



திருப்பூர்: தாராபுரத்தில், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியம், கண்ணாங் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆலம்பாளையம் கிராமத்தில், வசித்து வரும் ரத்தினசாமி என்பவரது மகன் திவாகர். இவர் தசை வளர்ச்சி குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

கை மற்றும் கால்கள் தசை வளர்ச்சி குறைபாடு உள்ளதால், தானாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இவ்வாறு உடல் நலக்குறைபாடு இருந்த போதிலும், திவாகர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். திவாகரை தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று வரும் காரணத்தினால் ரத்தினசாமி எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது.



இதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மின்சார மூன்று சக்கர வாகனத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவரது சொந்த செலவில் வழங்கினார்.



மேலும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவும் வகையில் வாகனம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...