ஆயுதப்படை காவலரின் முயற்சியால் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு என்பவரின் முயற்சியின் காரணமாக சக காவலர்கள் உதவியுடன், உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூலம் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் இன்று துவங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு, அரசு கலைக் கல்லூரியுடன் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆயுதப்படை பணியாற்றும் முதல் நிலை காவலர் பாபு தன்னுடன் பணியாற்றும் காவலர்கள், உதவும் கரங்கள் குழு மூலமாக அரசு கலைக் கல்லூரியில் பயிலும் அரசியல் துறை மாணவர்களுடன் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை அரசு கலைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின் காவலர் பாபு கூறியதாவது,

கோவையில் ஒரு கோடி மரங்களை நடவுள்ளோம். முதற்கட்டமாக கோவை அரசு கலைக் கல்லூரியில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளது. குக் கிராமம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் அதிகம் கொடுக்கும் மரங்கள் மற்றும் நிழல் தரவுள்ள மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்வில் காவலர் குழு மற்றும் லைன்ஸ் கிளப் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முக்கியமாக மூங்கில், இயல்வாகை, புங்கமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...