திருப்பூரில் கனமழை - பல்லடம் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பரவலாக கன மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: கனமழை காரணமாக பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை, நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில், இன்று பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.



மேலும் மழைநீர் வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்த்தொற்று ஏற்படவும் வாயப்புள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...