திருப்பூரில் கனமழை - பல்லடம் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பரவலாக கன மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: கனமழை காரணமாக பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை, நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில், இன்று பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.



மேலும் மழைநீர் வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்த்தொற்று ஏற்படவும் வாயப்புள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...