தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க கூடாது - பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மனு!

தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் பேருந்தில் சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க அரசாணை வெளியிட்டதாக கூறி தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி கோவை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க கூட்டமைப்பினர் இன்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



அண்ணா சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் செல்ல முற்பட்ட நிலையில், காவல் துறையினர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் முன்பாக தடுத்து நிறுத்தினர்.



ஊர்வலமாக செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்கள் பேருந்துகள் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.



ESI, PF பணத்தை எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை நீக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, காலை 7 மணிக்கு வேலை நேரம் போன்றவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர். தூய்மை பணிகளை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுக்க கூடாது.



ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

மேலும், செப்டம்பர் 15 ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து தூய்மை பணியாளர் சங்கங்களையும் சந்தித்து அவர்களையும் ஒருங்கிணைத்து தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு எதிராக இயக்கம் நடத்த போவதாகவும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...