கோவையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் - பாமக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாமக நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆவணங்களுடன் அசோக் ஸ்ரீநிதி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது.



ஒரு ஸ்மார்ட் போர்டு 2 லட்சம் ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என ஸ்மார்ட் போர்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரியவந்தது.

மேலும் இணைய சேவை பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டாலும் கூட ஒரு ஸ்மார்ட் போர்டுக்கு 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது.

அதேசமயம் இத்திட்டத்தில் தொகுதி நிதியை தொகையாக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது, ஊரக வளர்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் டெண்டர் பணிகள் மூலம் தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...