உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

உடுமலை சந்தையில் கடந்த வாரங்களில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக உடுமலை சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் நிலையே இருந்து வந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 கிலோ எடை கொண்ட வெட்டி தக்காளி 1800 ரூபாய் வரை விலை போனது அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குடும்ப பட்ஜெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி காய்கறிகளுக்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனைப்பட்டு வந்த இல்லத்தரசிகள் தக்காளி விலை குறைவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...