உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

உடுமலை சந்தையில் கடந்த வாரங்களில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக உடுமலை சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் நிலையே இருந்து வந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 கிலோ எடை கொண்ட வெட்டி தக்காளி 1800 ரூபாய் வரை விலை போனது அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குடும்ப பட்ஜெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி காய்கறிகளுக்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனைப்பட்டு வந்த இல்லத்தரசிகள் தக்காளி விலை குறைவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...