நொய்யல் ஆறு சாய மற்றும் மருத்துவ கழிவுகளால் பாதிப்பு - மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் நீரானது சாயக் கழிவுகளாலும் மருத்துவ கழிவுகளாலும் பாதிப்படைந்து உள்ளதாக விவசாயிகள், மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பிய பின், ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: சாய கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளதாக கூறி, மாசடைந்த நீருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் நீரானது சாயக் கழிவுகளாலும் மருத்துவ கழிவுகளாலும் பாதிப்படைந்து உள்ளதாக விவசாயிகள், மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னலாடை தொழில் மூலமாக உலக அளவில் பெயர் பெற்ற ஊர் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தாரை வாழ வைக்கும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது.

தமிழகத்தின் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களுக்கும் வாழ்வளிக்கும் ஊராக விளங்கி வருகிறது. பின்னலாடை தொழில் மூலமாக உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த திருப்பூர் மாநகரை சுற்றியும் நொய்யல் ஆற்றின் கிளைகள் பறந்து விரிந்து செல்லுகின்றன.

கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக நொய்யல் நீரில் சாயக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் அதிக அளவில் மசடைந்து வருவதாகவும் இது குறித்து அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.



இதன் காரணமாக மாசடைந்த நொய்யல் நீருடன் விவசாயிகள், மற்றும் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...