முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உடுமலையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.



இந்த அமைதி பேரணியில் உடுமலை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான வேலுச்சாமி, நகராட்சி தலைவர் மத்தீன், குடிமங்கலம் வடக்கு ஓன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, வழக்கறிஞர் செந்தில்குமார், யூ.என்.பி.குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...