தக்காளியின் வரத்து அதிகரிப்பு - திருப்பூரில் தக்காளி விலை ரூ.60 வரை சரிவு!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக தற்பொழுது பாதிக்கு பாதியாக குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வரும் காலங்களில் தக்காளியின் விலை தொடர்ந்து சரியும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை பாதிக்கு பாதியாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தக்காளியின் விலை புதிய உச்சத்தை எட்டியிருந்தது. ஒரு கிலோவின் விலை 100 முதல் 180 வரை உயர்ந்த வண்ணம் இருந்தது.

தக்காளியின் வரத்து குறைந்த காரணத்தினாலேயே விலையானது புதிய உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக தக்காளியின் விலையை பொதுமக்கள் தங்கத்துடன் ஒப்பிட்டு பேசியதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இதனிடையே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு நியாய விலை கடைகளில் தக்காளி ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து விளைச்சலை அதிகப்படுத்தி தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்பொழுது தக்காளியின் விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் அதன் விலையும் சரிய தொடங்கியுள்ளது.



தக்காளிக்கு அதிக விலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் விவசாயிகள் இதனை அதிக அளவில் பயிரிட்டுள்ளதால் தற்பொழுது மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் தக்காளி வரத்துவங்கியுள்ளதால் இதன் விலை குறைந்து வருகிறது.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம், தென்னம்பாளையம் மார்க்கெட் பல்லடம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் 12 கிலோ எடை கொண்ட டிப்பர் 1200 ரூபாய்க்கும், 24 கிலோ எடை கொண்ட டிப்பர் 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.



தற்பொழுது வரத்து அதிகரித்துள்ளதால் 12 கிலோ எடை கொண்ட டிப்பர் 600 முதல் 800 வரையும், 24 கிலோ எடை கொண்ட டிப்பர் 1200 முதல் 1400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தக்காளியின் விலை இன்றைய நாளில் கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் காலங்களிலும் இதன் விலை மேலும் சிறிய தொடங்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...