கோவை அருகே சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - இளம்பெண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாக்கியலட்சுமி என்ற இளம்பெண் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயது பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் பாக்கியலட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி தனது மகனுடன் வசித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய சமையறைக்கு சென்ற போது, அங்கிருந்த விளக்கை ஆன் செய்ய சுவிட்சை போட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில், பாக்கியலட்சுமி உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...